Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் பணவீக்கம் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

தொடரும் பணவீக்கம் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்
, வியாழன், 21 ஏப்ரல் 2011 (15:18 IST)
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் உயரும் பணவீக்கம் கவலையளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய ஆட்சிப் பணிச் சேவை நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. திருப்திகரமான வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிற்கு இடையே இந்த வளர்ச்சியை நாம் எட்டியுள்ளது முக்கியமானது. அதேநேரத்தில், கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து அதிகரித்துவரும் பணவீக்கம், குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மிகுந்த கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil