Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (15:01 IST)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழ ை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய பணிக்காக தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்துக் கொண்டிருந்தனர். மேட்டூர் அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், அணை காலம் கடந்த 28 ஆம் தேதி திறக்கப்பட்டது. விவசாயிகள் குறுவை சாகுபடி இல்லாததால், சம்பா பருவ சாகுபடியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் தட்பவெட்ப நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனலுக்கு பதிலாக குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முத்துப்பேட்டை 63 மி.மீ, வலங்கைமான் 55 மி.மீ, திருத்துறைப்பூண்டி 46 மி.மீ,
குடவாசல் 43 மி.மீ, திருவாரூர் 34 மி.மீ, நன்னிலம் 14 மி.மீ, நீடாமங்கலம் 12 மி.மீ, மன்னார்குடி 11 மி.மீ, பதிவாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments