Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ரூ.24,230 கோடி முதலீட்டிற்கு அனுமதி

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2011 (18:28 IST)
இந்திய எண்ணெய் கழகம், மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா, அப்பாலோ டயர்ஸ், மெட்ராஸ் சிமெண்ட்ஸ், சாம்சங் இந்தியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.24,230 கோடி அளவிற்கு முதலீட்டில் பல்வேறு தொழில்கள் தொடங்க தமிழக அரசு இன்று அனுமதி அளித்தது.

இந்நிறுவனங்களின் தொழில் முதலீட்டிற்கு அரசின் அனுமதியை அந்தந்த நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களிடம் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று நேரடியாக வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழக தொழில் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்து இந்நிறுவனங்கள் தொடங்கவுள்ள தொழில்கள் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments