டாட்டா நிறுவனம் வாங்கியுள்ள உலகின் சொகுசுக் கார் தயாரிப்பாளர்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், ஸ்டேஷன் வேகன், ரோட்ஸ்டர் உள்ளிட்ட பல புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
FILE
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை 2008ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் டாலருக்கு டாட்டா நிறுவனம் வாங்கியது. இதன் தயாரிப்புகள் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கடந்த இரண்டு காலாண்டுகளில் இலாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்த ரத்தன் டாட்டா, ஜாகுவாரின் விற்பனை தனது எண்ணத்தை ஈடேற்றிவிட்டது என்று கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த டாட்டா நிறுவனத்தின் 65வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ரத்தன் டாட்டா, புதிய வாகனங்களை தயாரித்து அறிமுகப்படுத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேலும் ரூ.2,880 கோடி முதலீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.