Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூறைக்காற்று- வெற்றிலை தோட்டம் சேதம்

சூறைக்காற்று- வெற்றிலை தோட்டம் சேதம்
தர்மபுரி: , திங்கள், 11 மே 2009 (16:33 IST)
தர்மபுரி பகுதியில் வீசிய கடும் சூறை காற்றால் 50 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் சரிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அக்கமனஹள்ளி, வெம் ளோலை, குப்பூர் ஆகிய பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வெற்றிலை தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெற்றிலை தோட்டம் போட்டுள்ளனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதில் அக்கனமம்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குன் செட்டி அம்ளி, குரும்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 50 ஏக்கரில் உள்ள வெற்றிலை கொடிக்கால் காற்றில் சரிந்து விழுந்தது.

இதனால் சுமார் ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil