Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் வட்டி விகிதத்தை 7 வங்கிகள் உயர்த்தின

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (20:40 IST)
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களின் மீதான வட்டி விகதத்தை (ரீபோ ரேட்) இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) உயர்த்தியதையடுத்து, கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதத்தை வங்கிகளும் 0.50 விழுக்காடு உயர்த்தியுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி ஆகியன வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளாகும்.

444 நாட்களுக்கு அதிகமான வைப்பு நிதிகளின் மீதான வட்டியை 0.50 விழுக்காடு உயர்த்தி 9.10 விழுக்காடாக அதிகரித்துள்ளது பாங்க் ஆஃப் பரோடா. அதற்குக் குறைவான வைப்பு நிதி மீதான வட்டியை 8.75 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வீட்டுக் கடன்களின் மீதான மாறக்கூடிய வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடன்களின் மீதான வட்டி விகிதத்தை 9.5 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்தியன் வங்கி.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments