ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசுக்கு ரூ.150 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விமானிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், விமானிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் 9வது நாளாக தொடர்ந்த வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றும் 9 விமானங்க்ள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.