Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொருள் பணவீக்கம் 17.05% ஆக உயர்வு

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2011 (13:31 IST)
காய்கறிகளின் கடுமையான விலையேற்றத்தின் காரணமாக ஜனவரி 22ஆம் தேதியுடன் முடிவுள்ள வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஒரு வாரத்தில் 1.48 விழுக்காடு உயர்ந்து 17.05 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 15.57 விழுக்காடாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 20.56 விழுக்காடாக இருந்ததென மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த ஓராண்டுக் காலத்தில் வெங்காயத்தின் விலை மட்டும் 130.41 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது குறைந்துள்ளது. உருளைக் கிழங்கின் விலை 6.22 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக காய்கறிகளின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 77.05 விழுக்காடு உயர்ந்துள்ளது!

பழ வகைகள் 15.47 விழுக்காடும், பால் விலை 11.41 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments