திங்கட்கிழமை சர்வதேச வணிகம் துவங்கியதும் இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் உயர்ந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலர்களை விற்பனை செய்ததால், இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 31 காசுகள் உயர்ந்து 60.57 ஆனது.
இது வெள்ளிக்கிழமை மாலை 60.88 என்ற நிலையில் இருக்கும் போது வணிகம் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.