ஜெர்மனி நாட்டில் உலகப் புகழ் பெற்ற சொகுசுக் கார் உற்பத்தியாளரின் ‘ஆட ி’ கார்கள் இந்தியாவின் முதன்மை சொகுசுக் கார்களாகும் என்று அந்நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவுத் தலைவர் மைக்கேல் பெர்க்சி கூறியுள்ளார்.
கொல்கட்டாவில் ஆடி கார் காட்சி-விற்பனை மையத்தைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் பெர்க்சி, “ஆடி-யை இந்தியாவின் முதன்மைக் கார் ஆக பார்க்க விரும்புகிறோம ்” என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சீனத்திலும் அதிகம் விற்பனை ஆகும் அதிக விலையுள்ள சொகுசுக் காரான ஆடி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 1,400 கார்களை விற்றுள்ளது என்றும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 71 விழுக்காடு வளர்ச்சியாகும் என்றும் கூறிய மைக்கேல் பெர்க்சி, “நாங்கள் எதிர்ப்பார்த்தைப் போல இந்தியாவில் ஆடி-யின் விற்பனை அதிகரித்து வருகிறத ு” என்று கூறியுள்ளார்.