Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல் பணி மீதான வரிச் சலுகை நிறுத்தப்படும்: ஒபாமா மீண்டும் உறுதி

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2010 (13:26 IST)
FILE
அயல் நாடுகளுக்கு அளிக்கப்படும் வணிக அயல் பணிகள் ( அவுட் சோர்சிங்) மூலம் கிடைக்கும் வருவாய்க்கு அமெரிக்க அரசு அளித்துவரும் வரிச் சலுகை நிறுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, இப்பிரச்சனையில் தனது நிலை தெளிவானது என்றும், உள்நாட்டில் வேலை வாய்ப்பு உரு்வாக்கும் முதலீட்ட்டாளர்களுக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படு்ம் என்றும் கூறியுள்ளார்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் கடைபிடிக்கப்பட்டுவந்த கொள்கைகளை விமர்சித்த பராக் ஒபாமா, “நாம் அளித்த இரண்டு வரிச் சலுகைகளால் நமக்கு பயன் எதுவும் கிட்டவில்லை. நாம் நடத்திய இரண்டு போர்களுக்கு மிக அதிகமான நிதிச் செலவு ஆகிறது, அதை யாரும் ஈடுகட்டவில்லை. நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதியில்லாத காரணத்தினால், அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் திட்டச் செலவு கூடிக் கொண்டே போகிறத ு” என்று அரசின் நிதி நெருக்கடியை விவரித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் அயல் நாடுகளுக்கு அளித்துவரும் அயல் பணிகளை நிறுத்தினால் அதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments