Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த வருடம் வருவாய் அதிகரிக்கும்: சிறு-நடுத்தர தொழில்கள் கருத்து

அடுத்த வருடம் வருவாய் அதிகரிக்கும்: சிறு-நடுத்தர தொழில்கள் கருத்து
புது டெல்லி: , செவ்வாய், 15 டிசம்பர் 2009 (12:08 IST)
உலக பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் குறைந்து, அடுத்த வருடம் வளர்ச்சி அடைவதுடன் வருவாயும் அதிகரிக்கும் என்று சிறு, நடுத்தர பிரிவு தொழிற்சாலைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து அலிபாபா டாடா காம், சுனோவெட் பிசினஸ் கன்சன்டிங் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல துறையைச் சார்ந்த 500 சிறு, நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்றவர்களில் 92 விழுக்காட்டினர் அடுத்த வருடம் (2010) வருவாய் 6 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 58 விழுக்காட்டினர் தொழில் வளர்ச்சி இருப்பதுடன், இலாபமும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

இதில் கலந்து கொண்டவர்களில் 56 விழுக்காட்டினர் அடுத்த வருடத்தில் இருந்து வளர்ச்சி அதிகரிப்பதுடன், இலாபமும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil