அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க சிறந்தது என குறிப்பிட காரணம் என்ன....!

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:37 IST)
அட்சய திரிதியை நாள் இந்தியாவில் தங்கம் வாங்க மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி  திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். 
அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக்  கொண்டாடினர்.
 
சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை' நாள் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சந்திரனும், சூரியனும் உச்சம் பெற்று இருக்கும். அட்சய திரிதியை தினத்தில் தான் திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன் அவதரித்ததாகவும், சொர்க்கத்தில் இருந்து கங்கை  பூமிக்கு வந்த தினமாகவும், திரேதா யுகத்தின் தொடக்கம் அட்சய தினத்தில்தான் வந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. 
 
அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி, நிலம் உள்பட ஏதாவது ஒன்றை வாங்கினால் அது பல மடங்காக பெருகி செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலுக்கல் முறை அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் முடிவு..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார வளர்ச்சி கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (07.11.2025)!

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments