தமிழகத்தில ் இன்று ஆடிப்பெருக்க ு விழ ா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட் ட த்தில ் பவான ி, காவிர ி, அமிர்தநத ி ஆகி ய நதிகள ் சங்கமிக்கும ் பவானிகூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் 20,000க்கும் அதிகமா க பொதுமக்கள் கூட ி புனித நீராடினர்.
ஏராளமான புதுமணத்தம்பதிகள் ஆற்றில் புனித நீராடியதோடு, மஞ்சள ், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தி ன ர ். இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்தனர்.
கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டார்கள்.
வீடுகளில் விரதமிருந்து பெண்கள ், முளைப்பாரிய ை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்தார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்ற ு இளம்பெண்கள ் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டுவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட்டனர ்.
விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி வ ண ங்கினார்கள ். மேட்டூர், ஒகேனக்கல்லில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடியதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்தி ன ர ்.
இதேபோல் திருவாரூர ், நாக ை, தஞ்சை ஆகி ய மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா இன்ற ு சிறப்பா க கொண்டாடப்பட்டது.