Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (10:57 IST)
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வுகளின் இறுதி முடிவுகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு பணியில் துணை கலெக்டர், காவல்துறை டி.எஸ்.பி., வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், ஊராட்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்ப கடந்தாண்டு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையும ், மே மாதம் 22ஆம் தேதியும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில ், இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்களின் பதிவு எண் மற்றும் பதவி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தளத்திலும் ( tnpsc.gov.i n) பார்க்க முடியும் என அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments