Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
சென்னை , வியாழன், 4 ஜூன் 2009 (10:57 IST)
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வுகளின் இறுதி முடிவுகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு பணியில் துணை கலெக்டர், காவல்துறை டி.எஸ்.பி., வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், ஊராட்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்ப கடந்தாண்டு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையும், மே மாதம் 22ஆம் தேதியும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்களின் பதிவு எண் மற்றும் பதவி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தளத்திலும் (tnpsc.gov.in) பார்க்க முடியும் என அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil