Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2009 (17:15 IST)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில ் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 37 பாடப் பிரிவுகளுக்கு 1,195 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணியை, ஆசிரியை தேர்வு வாரியம் மேற்கொண்டது.

விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் 30,259 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது. இதன் முடிவில் 5,930 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். ஜூன் 8 முதல் 12ஆம் தேதி வரை நடந்த நேர்முகத் தேர்வில் 5,638 பேர் பங்கேற்றனர்.

இதன் முடிவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், மைரோ பயாலஜி, தெலுங்கு, ஹிந்தி ஆகிய 7 பாடங்களுக்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் இணையதளத்தில் ( trb.tn.nic.i n) வெளியிட்டுள்ளது.

அந்தத் தகவலில் தமிழ் பாடத்திற்கு 92 பேரும், ஆங்கிலத்திற்கு 181 பேரும், கணித பாடத்திற்கு 101 பேரும், இயற்பியலுக்கு 121 பேரும், மைரோ பயாலஜிக்கு ஒருவரும், தெலுங்கு பாடத்திற்கு 4 பேரும், ஹிந்திக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments