Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அமிலமாக மாறும் ஆர்டிக் கடல்

Webdunia
செவ்வாய், 7 மே 2013 (12:06 IST)
கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வே ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களிடையே பெரிய மாறுதல் ஏற்படக் கூடும் என்று கூறும் அந்த ஆய்வு, ஆனால் அந்த மாறுதல்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் தெளிவாக உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் மேலும் சொல்கிறது.

FILE
கரியமில வாயுவின் காரணமாக புவி வெப்பமடைகிறது என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு விஷயம் என்றாலும், அவற்றை கடல் காற்றிலிருந்து ஈர்த்துக் கொள்ளும்போது, கடல்நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது என்பது பெரிய அளவில் தெரியாமல் இருந்தது.

குளிர்ந்த நீரில் கரியமில வாயு வேகமாக உள்வாங்கப்படும் என்பதால், குறிப்பாக ஆர்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத்தன்மை வாய்ந்ததாக மாறும் வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Show comments