வானிலை மாற்ற விளைவுகளைச் சமாளிக்க கடன் வழங்கும் ஐ.நா.

Webdunia
புதன், 1 டிசம்பர் 2010 (15:42 IST)
வானில ை மாற்றத்தினால ் ஏற்படும ் மோசமா ன இயற்கைச ் சீரழிவுகளைச ் சமாளிக் க ஏழ ை நாடுகளுக்க ு பில்லியன ் டாலர்கள ் கணக்கில ் உதவித ் தொக ை அளிப்பதாய ் கோபன்ஹேகன ் மாநாட்டில ் ஐ. ந ா. சூளூரைத்தத ு. ஆனால ் தற்போத ு உதவித ் தொக ை கடன ் தொகையா க மாறியுள்ளத ு.

ஐ. ந ா. திரட்டியுள் ள வானில ை மாற் ற உதவித ் தொகைகளில ் பாத ி கடனாகவ ே அளிக்கப்படவுள்ளத ு.

மேலும ் உதவ ி என்பத ு வெப்பவாய ு வெளியேற்றத்தைக ் குறைப்பதற்கா ன உதவியாகவும ் இருக்கவேண்டும ். ஆனால ் தற்போத ு கடன ் என் ற பெயரில ் ஒர ு குறைந் த தொக ை விளைவுகளைச ் சமாளிக் க என் ற பெயரில ் தூக்க ி வீசப்படுகிறத ு. இதன ை சுற்றுசூழல்வாதிகள ் உடனடியா க கண்டனம ் செய்துள்ளனர ்.

தற்போத ு மெக்சிகோவில ் உள் ள கான்கன ் மாநாட்டில ் இரண்டாம ் நாளா ன நேற்ற ு ஏற்பட் ட முன்னேற்றங்கள ் பற்றி ய செய்தியில ் ஐ. ந ா. 7.2 பில்லியன ் டாலர்கள ் தொகையில ் 2.9 பில்லியன ் டாலர்கள ் தொக ை திரட்டியுள்ளத ு.

2012 ஆம ் ஆண்ட ு முன்னேறி ய நாடுகள ் ஏழ ை நாடுகளுக்க ு சுற்றுசூழல ் விளைவுகளைச ் சமாளிக் க 30 பில்லியன ் டாலர்கள ் தொக ை தருவதா க ஒப்புக ் கொண்டுள்ளத ு.

ஆனால ் இதுவர ை பாதித ் தொகைதான ் திரட்டப்பட்டுள்ளத ு. கான்கனில ் உள் ள ஐ. ந ா. வின ் தலைம ை உடன்படிக்கையாளரா ன ஆர்த்தர ் ரஞ்ச ்- மெட்ஸ்ஜர ், முதலில ் கடனா க அளிப்பத ை சிறந் த வழிமுற ை என்ற ு கூறியுள்ளார ்.

அதுவும ் சுத்தமா ன எர ி ஆற்றல ் திட்டங்களுக்கா ன கடனுதவியாகவ ே இத ு வழங்கப்படுகிறத ு என்ற ு கூறியுள்ளார ் அவர ். எனவ ே முன்னேறி ய நாடுகள ் நாசம ் செய்யும ் வானிலையால ் ஏற்படும ் மோசமா ன விளைவுகளைச்சமாளிக்கக ் கூ ட அல் ல இந் த கடனுதவ ி மேலும ் எரிபொருள ை பயன்படுத் த அதாவத ு பசுமைப ் பாதுகாப்ப ு எரிபொருள ் ( இப்பட ி ஒன்ற ு இருக்கிறத ா என்ற ு தெரியவில்ல ை) பயன்பாட்டிற்கா ன கடனுதவ ி என்ற ு கூறுகிறத ு ஐ. ந ா.

மெட்ஜர ் மேலும ் கூறுவதைக ் கவனித்தால ் நமக்க ு விசித்திரமாகவ ே இருக்கும ்.

அதாவது ஏற்கனவே அதிகம் கடன்படாத நாடுகளுக்கு உதவித்தொகை அளிப்பது பணத்தை விரயம் செய்வது என்கிறார் மெட்ஜர். அதனால் முதலில் கடனைத் திருப்பித் தரும் நாடுகளுக்கு வானிலை மாற்ற விளைவுகளைச் சமாளிக்க கடனுதவி என்ற பெயரில் ஒரு தொகை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த நாடுகள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தி விடுமாம் அதனை மேலும் இது போன்ற "நல்ல" (!) காரியங்களுக்கு ஐ.நா. பயன்படுத்துமாம்.

ஐ.நா.வின் இந்தத் திட்டத்தையும், அதற்கான வக்காலத்தையும் சரியாக விமர்சிக்கும் கிரீன் பீஸ் இயக்க உறுப்பினர் டாம் ரைடிங், தொழிற்துறையில் முன்னேறிய நாடுகள் புவிவெப்பமடைதலின் விளைவுகளுக்கு பாதிக்கப்படும் நாடுகளுக்கு கடனுதவி அளிப்பது என்பது மோசமான திட்டம் என்று விமர்சித்துள்ளது.

மேலும் டாம் ரைடிங் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருப்பது நகைச்சுவையை மீறிய அவலத்தைச் சுட்டுவதாய் அமைந்துள்ளது:

" நான் என் காரைக் கொண்டு நேரே இன்னொருவர் கார் மீது மோதுகிறேன், அதன் பிறகு ஒரு தொகையை அவருக்குக் கடனாகக் கொடுத்து காரை பழுது பார்க்கக் கூறுகிறேன்." இதுதான் ஐ.நா. கூறுவது என்று கூறுகிறார் கிரீன் பீஸ் இயக்க உறுப்பினர்.

காங்கோவில் காடுகள் அழிப்பைத் தடுப்பது, மாலத்தீவுகளின் கடற்கரைப் பகுதிகளை அரிப்பிலிருந்து காப்பது, கிராமப்புற சீனாவில் சுற்றுசூழலைப் பாதுகாப்பதற்குச் சாதகமான நிலைமைகளை வளர்த்தெடுப்பது உள்ளிட்ட விஷயங்களும் ஐ.நா.வின் உதவித்திட்டங்களில் உள்ளது.

ஆனால் வளரும் நாடுகளின் வெப்பவாயு வெளியேற்றங்களைக் குறைப்பதில் 50% தொகையும் 30% தொகை வானிலை மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க ஏழை நாடுகளுக்குக் கொடுக்கப்படுவதாயும் தற்போது பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான அணுகுமுறை என்று ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது.

ஆனால் பாதிக்கப்படும் ஏழை நாடுகள் முன்னேறிய நாடுகளிலிருந்து அதிக உதவிகளை எதிர்பார்க்கிறது. ஏனெனில் கடலரிப்பு, மிகப்பெரிய புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவை ஏழைநாடுகளே.

ஆனால் ஏழைநாடுகள் கொடுக்கும் உதவிகளை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறதா என்பதை தீவிரமாக கண்காணிப்பதும் அவசியம் என்ற ரீதியிலும் கான்கன் மாநாட்டு விவாதங்கள் சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

Show comments