Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி வெப்பமடைதல்: கடல் நீர் மட்டம் 7 அடி உயர்கிறது!

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2013 (12:59 IST)
இனி வரும் காலங்களில் புவியின் வெப்ப நிலை ஒவ்வொரு செல்சியஸ் டிகிரி அதிகரிக்கும்போதும் கடல் நீர் மட்டம் 2.3 மீட்டர்கள் அதிகரிக்கும் என்று புதிய சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
FILE

கடந்த கால வெப்ப நிலை உயர்வு அதனையடுத்த கடல் நீர்மட்ட உயர்வு தற்போதைய வெப்ப நிலை உயர்வு இதனையடுத்த கடல் நீர் மட்ட உயர்வு என்ற அடிப்படையில் இந்த ஒப்பு நோக்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆய்வில் எந்த அளவுக்கு புவி வெப்பமடையும் என்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்தவில்லை. மேலும் எப்படி கடல் நீர்மட்டம் உயர்கிறது என்பதையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இவையெல்லாம் காலம் போகப் போகத்தான் அறுதியிடமுடியும் என்று ஆரிஜன் பல்கலை வானிலை ஆய்வாளர் பீட்டர் கிளார்க் தெரிவித்துள்ளார்.

கடல் நீர்மட்டம் அதிகரிப்பில் 4 காரணிகள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது.

பனிச்சிகரங்கள் உருகுதல், கிரீன்லாந்து பனிப்படலம் உருகுதல், அண்டார்ட்டிக் பனி உருகுதல், மேலும் கடல் நீர் உஷ்ணமடையும்போது கடல் தானாகவே விரிவடைவது. ஆகிய இந்த 4 காரணங்கள்தான் கூறப்பட்டுள்ளது.

இதன் முழு விவரம் இனிமேல்தான் வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments