Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (12:52 IST)
வனங் களின ் பாதுகாப்பை பராமரித்து, அதை விரிவுப்படுத்தும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

பல மாநிலங்களில் வனப்பகுதியை மேம்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் பணம் செலவிடுவதில் சிரமப்படுகின்றன.

இதுபோன்ற சுமைகளை கருத்தில் கொண்டு, வனத்தை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும், வனப் பகுதியை விரிவுப்படுத்துவதிலும் கூடுதல் அக்கறை காட்டும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நிதி மற்றும் திட் டக ் கமிஷன், இந்த ஊக்கத்தொகையை வழங்கும். இதன் மூலம் வனப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments