Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் நீர்மட்டம் 60% வேகமாக அதிகரித்து வருகிறது!

Webdunia
புதன், 28 நவம்பர் 2012 (13:03 IST)
வானிலை மாற்ற ஐ.நா.வின் பன்னாட்டு குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கும் அளவைக் காட்டிலும் 60% அதிகமாகவே கடல் நீர்மட்டம் உலக அளவில் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
FILE

சாட்டிலைட் படங்கள் இதனை பெரிதும் உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து வானிலை மாற்ற, புவிவெப்பமடைதல் விளைவுகளை அரசுகள் மறைத்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து வருகிறது.

உதாரணமாக ஐ.ந. பன்னாட்டு வானிலை மாற்றக் குழுவின் அறிக்கையின் படி ஆண்டுக்கு கடல் நீர்மட்டம் 2மி.மீ என்றால் உண்மையில் 3.2மிமீ அதிகரித்து வருகிறது.

இது வெறும் துருவப்பகுதிகளில் பனி உருகுவதால் மட்டுமல்ல, புவிவெப்பமடைதலின் கண்ணுக்குப் புலப்படா பல காரணங்களினால் கடல் நீர்மட்டம் விரைவில் அதிகரித்து வருவது என்பதெ உண்மை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஐ.நா. பன்னாட்டுக்குழு புவிவெப்பமடைதல் விளைவுகளின் தரவுகளை திருத்திக் காட்டி வருவது எதனால்? இதனால் என்ன நன்மை?

உண்மையான தரவுகளை அளித்தால்தான் நாடுகள் அதற்குத் தயாராக முடியும்.

உலக நாடுகள் புவிவெப்பமடைதல் பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும், பொறுப்புடன் சிந்திக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஏற்கனவே கதறி வருகின்றனர்.

ஏற்கனவே டர்பன், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கே கடல் நீர்மட்ட உயவினால் ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் நம் அரசுகாள் "பொருளாதார முன்னேற்றம்" பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன!

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments