Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வு

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2015 (19:58 IST)
சென்னை அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளர் பணிக்கான தகுதித் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில்  நடைபெறுகிறது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதிகாண் தேர்வு நவம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையால் நடத்தப்படும் மின்கம்பியாள் உதவியாளருக்கான தகுதித் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 21- 40 ஆகும்.

இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் அக்டோபர் 16 முதல் நவம்பர் 5 வரை, அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. படிவத்தின் விலை ரூ. 10.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 5 ஆம் தேதியாகும்.

இந்த பணிக்குறித்து மேலும் விவரங்களுக்கு, 044 26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments