Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SBI வங்கி எழுத்தர் பணிக்கு இலவசப் பயிற்சி

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (15:29 IST)
ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வங்கித் தேர்வு குறித்து இலவசப் பயிற்சியை காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு துறையும் இணைந்து அளிக்கின்றன. இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு கடந்த 20ஆம் தேதி துவங்கியது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் துவக்கி வைத்த இலவச பயிற்சி வகுப்பில் 200 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முன்மாதிரித் தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வாகும் 100 பேருக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சிய வசந்தகுமார், “முழு கவனமும் பயிற்சியில் மட்டுமே இருக்க வேண்டும். பயிற்சி வகுப்புக்கு குறித்த நேரத்திலும், விடுப்பு எடுக்காமலும் வருபவர்களுக்கு தேர்வை எழுதுவதில் எந்தவித சிரமம் இருக்காது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments