Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

SBI வங்கி எழுத்தர் பணிக்கு இலவசப் பயிற்சி

SBI வங்கி எழுத்தர் பணிக்கு இலவசப் பயிற்சி
காரைக்கால் , செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (15:29 IST)
ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வங்கித் தேர்வு குறித்து இலவசப் பயிற்சியை காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு துறையும் இணைந்து அளிக்கின்றன. இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு கடந்த 20ஆம் தேதி துவங்கியது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் துவக்கி வைத்த இலவச பயிற்சி வகுப்பில் 200 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முன்மாதிரித் தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வாகும் 100 பேருக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சிய வசந்தகுமார், “முழு கவனமும் பயிற்சியில் மட்டுமே இருக்க வேண்டும். பயிற்சி வகுப்புக்கு குறித்த நேரத்திலும், விடுப்பு எடுக்காமலும் வருபவர்களுக்கு தேர்வை எழுதுவதில் எந்தவித சிரமம் இருக்காது. இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil