Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6வது மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை!!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (18:03 IST)
இந்திய கடற்படையில் சமையல் மற்றும் சுகாதார பணிகளுகக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
இதற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்களும், 6 ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
 
விண்ணப்பதாரர்கள் 1-10-1996 மற்றும் 30-9-2000 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றவர்களும், 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
 
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.
 
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். http://www.joinindianavy.gov.inஎனும் இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பங்களில் சரியான தகவல்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 2-1-2017. விரிவான விவரங்களை www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments