Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓரியண்டல் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஓரியண்டல் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி
சென்னை , வெள்ளி, 30 அக்டோபர் 2009 (14:02 IST)
ஓரியண்டல் வணிக வங்கியில் காலியாக உள்ள 313 புரபேஷனரி ஆபீஸர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸின் அதிகார்வபூர்வ இணையதளமான obcindia.co.in இணையதளம் மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (அக்டோபர் 31) வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 31இல் நடைபெறுகிறது.

கல்வித் தகுதி: அறிவியல் பட்டதாரிகள் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.(எஸ்சி, எஸ்டி 55%). இதர பட்டதாரிகள் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்..(எஸ்சி, எஸ்டி 50%). எம்பிஏ, சிஏ, சிஎஃப்ஏ, எம்சிஏ பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆமதாபாத், பெங்களூர், போபால், சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கோல்கத்தா, லக்னெள, மும்பை ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணங்களை ஓரியண்டல் வங்கிக் கிளைகளில் செலுத்தலாம். செலுத்திய விவரங்களை எழுத்துத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு வடிவிலான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு obcindia.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil