Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வேயில் 1.72 லட்சம் காலிப்பணியிடம்: மம்தா

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2009 (13:45 IST)
இந்திய ரயில்வேயில் 1.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் அவை நிரப்பப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மம்தா, ரயில்வேயில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 15,66,964 பணி இடங்களில், தற்போது 1,72,444 காலியிடங்கள் இருப்பதாகவும், இதில் குரூப்-சி பிரிவில் மட்டும் 1,12,566 காலியிடங்கள் உள்ளது என்றார்.

இதேபோல் குரூப்-டி பிரிவில் 58,329 பணியிடங்களும், குரூப்-ஏ, பி பிரிவுகளில் 1,549 இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவித்த மம்தா, ரயில்வே போன்ற மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் எப்போதும் காலியிடங்கள் இருப்பது வாடிக்கைதான். அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மம்தா கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments