Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு பள்ளிகள், பல்கலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2009 (15:54 IST)
மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தீஸ்வரி, கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 19 மத்திய பல்கலைக்கழகங்களில் 1,812 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கடந்த 2008-09 கல்வியாண்டில் மட்டும் 2,749 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதே காலகட்டத்தில் நவோதயா பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3,288 ஆக உள்ளதாகவும் இணை அமைச்சர் புரந்தீஸ்வரி தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments