எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பியல் பிரிவில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயம் படித்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆப்ரிக்காவில் வேலை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம ், மருத்துவர்கள ், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள ், பொறியாளர்கள ், டெக்னீஷியன்கள் மற்றும் இதர தொழில்திறன் படைத்த மனுதாரர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வருகிறது.
தற்போது தொலைத்தொடர்பு துறையில் சாட்டிலைட ், நெட்வொர்க்கிங் மற்றும் ஹார்டுவேர் அனுபவம் உள்ளவர்களை ஆப்ரிக்காவுக்கு அனுப்ப வேலைவாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொறியியல் பிரிவில் எல்கட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன ், பி.டெக் தகவல் தொடர்பியல் பட்டம் பெற்றவர்களுக்கு ஓராண்டு அனுபவமும ், டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 ஆண்டு அனுபவமும் அவசியம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஆப்ரிக்கா செல்வதற்கான விச ா, நிறைவான ஊதியம ், இலவச இருப்பிடம ், விமான பயணச்சீட்ட ு, பணிக்காலத்தில் போக்குவரத்து செலவு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்காணும் தகுதி உடையவர்கள் இரு விண்ணப்பத்துடன ், மூன்று புகைப்படங்கள ், கல்வ ி, அனுபவம ், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து “அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம ், எண்:48, டாக்டர் முத்துலட்சுமி சால ை, அடையாற ு, சென்னை-20” என்ற முகவரிக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.