Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,105 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2013 (17:50 IST)
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள 10,105 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு பெயர் இனி மாநில குடிமை பணி தேர்வு என்று மாற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு தேர்வு முறை பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 1500 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குரூப்-2 இல் 1500 பணியிடங்களும், குரூப்-4 இல் 2716 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 2300 டாக்டர் பணியிடங்களும், 1500 கால்நடை டாக்டர் பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments