Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் டிச.18 முதல் ராணுவத்திற்கு ஆள் சே‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:20 IST)
ராணுவ‌த்‌தி‌ல் தொழில்நுட்ப பிரிவு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாம ் வேலூரில் டிச‌ம்ப‌ர் 18 முதல் 21ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவு வேலைகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் வேலூர் கோட்டையில் உள்ள காவல‌் பயிற்சி பள்ளியில் 18ஆ‌ம் தேதி தொடங்கி 21ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

பிளஸ்-2 படி‌ப்‌பி‌ல் அறிவியல் பாடங்களையும் கணிதத்தையும் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 40 ‌விழு‌க்காடு மதிப்பெண் அவசியம். வயது 23-க்குள் இருக்க வேண்டும். 165 செ.மீ. உயரம் தேவை. மார்பளவு குறைந்தபட்சம் 77-82 செ.மீ. என்ற அளவில் விரிவடைய வேண்டும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 18ஆ‌ம் தேதி அன்றும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 20ஆ‌ம் தேதி அன்றும் வர வேண்டும். அதிகாலை 5.30 மணிக்கே முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட வேண்டும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.


மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments