Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (12:02 IST)
பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படாது; திட்டமிட்ட காலப்படி தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், நடப்புக் கல்வியாண்டுக்கான பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை அரசு தேர்வுகள் துறை மறுத்துள்ளது.

இதுகுறித்து அரசு பொதுத் தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், இத்தகவலை கேட்டு மாணவர்களோ, பெற்றோர்களோ குழப்பம் அடையத் தேவையில்லை. பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் அரசுக்கு இதுவரை இல்லை என்றார்.

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்வுகள் குறுக்கிட்டால் அப்போது தேர்வுகள் நடத்துவது பற்றி ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments