டிச.14இ‌ல் தே.மு.தி.க. சா‌ர்‌பி‌ல் வேலைவாய்ப்பு முகாம்!

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (15:45 IST)
தே.மு.தி.க. சா‌ர்ப‌ி‌ல் செ‌ன்னை அ‌ண்ணாநக‌ர் மே‌ற்‌கி‌ல் இ‌ம்மாத‌ம் 14ஆ‌ம் தே‌தி வேலைவா‌ய்பு முகா‌ம் நடைபெற உ‌ள்ளதாக அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவர் விஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் ‌வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், " தே.மு.தி.க. சார்பில் இளைஞர்கள் மகளிர் உட்பட 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதையொட்டி பல்வேறு இடங்களிலிருந்தும் வேலை வாய்ப்ப ு‌க ்கோரி மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக 22.11.2008 அன்று சேலத்திலும், 30.11.2008 அன்று ஈரோட்டிலும், 7.12.2008 அன்று கோவையிலும் வேலைவாய்ப்பு முகாம் முதற் கட்டமாக நடைபெற்றது.

இந்த முகாம்களில் சுமார் 20 ஆயிரம் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் சுமார் 8,000 பேர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டு விட்டது.

அடுத்த கட்டமாக சென்னையில் 14.12.2008 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் இந்த முகாமை தொடங்கி வைக்கிறேன். இந்த முகாம் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை அண்ணாநகர் மேற்கு திருமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள லியோ மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும்.

இதில் சுமார் 350 தொழில் நிறுவனங்களிலிருந்து நேர்காணல் செய்து தேர்வு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட இளைஞர்கள், மகளிர் தங்கள் படிப்பிற்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் முழு தயாரிப்போடு இந்த நேர் காணலில் கலந்து கொள்ள வே‌ண்டு‌ம ்.

ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், எந்த இடங்களில் வேலை கிடைத்தாலும் அங்கு போய் சேருவதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தகுதியைப் பொறுத்தே வேலைகள் கிடைக்க ு‌ம் என்பதால் எந்த வகையான சிபார ிச ுகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாத ு.

சென்னையில் தலைமைக் கழகத்திற்கு முன்பே மனு அனுப்பியவர்கள் இந்த நேர்காணலின் கலந்து கொள்ளலாம். புதிதாக வேலை தேடி வருவோரும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்" எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments