தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம ் என்று தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மைச் செயலாளர் குட்சியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப ்பில், " தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், வேலை வாய்ப்புக்காக ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றுகளின் 2 நகல்கள் மற்றும் பதிவு புதுப்பித்தல் கட்டணமாக ரூ.112க்கான வரைவேல ையை (ட ி. ட ி.) 'OVERSEAS MANPOWER CORPORATION LTD' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து, "அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்ன ை- 20" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.