இத ு தொடர்பா க அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், தம ி ழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.
மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் ச ெ ய்ய 15.10.2008 முதல் 20.10.2008 வரையிலும் 26.11.2008 முதல் 28.11.2008 வரையிலும் 22.12.2008 மற்றும் 23.12.2008 தேதிகளில் கலந்த ா ய்வு நடைபெற்று 853 மருத்துவர்கள் நியமனம் ச ெ ய்யப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு வேலைவ ா ய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல ், கலந்த ா ய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்த ா ய்வில் பங்கு கொள்ள அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்துத்தெரிந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர ் கேட்டுக்க ொ ண்டுள்ளார ்.