Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலை‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 15 முத‌ல் ‌வி‌ண்ண‌ப்‌ப‌ம் வழ‌ங்க‌ப்படலா‌ம்

Webdunia
புதன், 13 மே 2009 (14:40 IST)
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2009-10 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் +2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் தொடங்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத‌ன்படி, +2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை அதாவது 14-ம் தேதி வெ‌ளியா‌கிறது.

எனவே கலை‌க் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெ‌ளி‌யி‌ட்ட செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், "அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. +2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, விண்ணப்ப விநியோகம் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்து, அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்" எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments