Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதழாளர் ஊதிய பரிந்துரை நாளை அளிக்கப்படும்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2010 (14:00 IST)
இதழாளர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பான தனது பரிந்துரையை, அது குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஜி.ஆர். மஜிதியா தலைமையிலான ஊதிய வாரியம் நாளை மத்திய அரசிடம் அளிக்கிறது.

பணியாற்றிடும், பணியாற்றாத இதழாளர்கள், நாளிதழ்களில் பணியாற்றும் இதர ஊழியர்கள் ஆகியோரின் ஊதியம் தொடர்பான பரிந்துரையை அளிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி மஜிதியா தலைமையிலான ஊதிய வாரியத்தின் பணிக்காலம் கடந்த மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுற்றது. ஆனால் பரிந்துரையை தயாரிக்க நீதிபதி மஜிதியா கால அவகாசம் கேட்டதையடுத்து டிசம்பர் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டது.

நீதிபதி மஜிதியா தனது பரிந்துரைகளை நாளை மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திடம் அளிக்கவுள்ளார். அதனை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர் அமைச்சகம் முழுமையாக பரிசீலனை செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு அனுப்பும்.

நீதிபதி மஜிதியா வழங்கும் பரிந்துரையை மிகுந்த சிரத்தையுடன் பரிசீலிக்கப்போவதாக தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments