கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை ( பிப்ரவரி 5-ம் தேத ி) தொடங்கவிருந்த சென்னை அறிவியல் திருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளத ு.
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட் டங்களில ் ஈடுபட்டு வந்தனர ்.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் கல்லூரி விடுதிகள ையும் மூடுவதாக கூறப்பட்டுள்ளது.
இந ்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த சென்னை அறிவியல் விழா, தேதி குறிப் பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளத ு.
சென்னை அறிவியல் விழா எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறிவியல் மையத்தின் துணை தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.