மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலின் மகனும் வழக்கறிஞருமான அமித் சிபல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்வால், மணிஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், சாஜியா இல்மி ஆகியோர் மீது டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமைச்சர் கபில் சிபலின் செல்வாக்கை பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வழக்குகளில்தான் ஆஜராவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசி இருப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குற்றம்சாற்றப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.