Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி பயணம்

வீரமணி பன்னீர்செல்வம்
சனி, 17 மே 2014 (13:38 IST)
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவு வெளியானதும் அவர் வதோதரா சென்று நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். அதேபோல் இன்று மாலை வாரணாசி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
இன்று டெல்லி வந்த மோடி, பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இன்று மாலை வாரணாசி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து விமானத்தில் பாபட்பூர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வாரணாசி செல்கிறார்.
 
அங்கு காசி விஸ்வாநாதர் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் கங்கை ஆற்றில் கங்கா ஆரத்தி எடுத்து வழிபடுகிறார். அதன்பிறகு வாரணாசியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
 
மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையினர் வாரணாசி வந்து முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
 
பின்னர் டெல்லி திரும்பும் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது பாஜக அமைச்சரவை பற்றியும், அமைச்சர்கள் நியமனம் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments