மோடி, ராகுல் உட்பட ஊழல் தலைவர்கள் பெயரை அறிவித்த கெஜ்ரிவால்!
, சனி, 1 பிப்ரவரி 2014 (13:19 IST)
ஊழல் தலைவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் தலைவர்கள் பெயரை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி, நரேந்திர மோடி, கபில் சிபில், ஆ. ராசா, மாயாவதி, முலாயம் சிங் யாதவ், ப.சிதம்பரம் ஆகியோர் இடம் பெற்ற பட்டியலை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “மக்கள் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை விரும்புகின்றனர். யார் அவர்களது இமேஜை பெரிதாக்க ரூ. 500 கோடி செலவு செய்கின்றனர்.அவர்கள் மக்களிடம் இருந்து அதனை திரும்ப பெறுவார்கள். பிறகு எப்படி அவர்களால் நல்ல அரசை கொடுக்க முடியும்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.தனியார் செய்தி சேனல் தகவலின்படி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ஊழல் தலைவர்கள்:
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திசுரேஷ் கல்மாடிநிதின் கட்காரிமத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேதேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல்பி.எஸ். எடியூரப்பாஆனந்த் குமார்வீரப்ப மொய்லிகே.டி. குமாரசாமிப. சிதம்பரம்அழகிரிகனிமொழிவெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித்ஆ. ராசாதருண் கோகய்மத்திய சட்டத் துறை மந்திரி கபில் சிபல்பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிசமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்யாதவ்ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்பவன் பன்சால்பரூக் அப்துல்லாநவீன் ஜிண்டால்