இதுபோன்று டிக்கெட் கட்டணம் வசூலிப்பது சேவைவரிக்கு உட்பட்டது ஆகும். மத்திய கலால் வரி சட்டத்தின் 14-வது பிரிவின்படி, இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அதுபற்றிய விவரங்களை கேட்டு அறிவதற்கும், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்வதற்கும் கலால் வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.
எனவே நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்களுக்கு எவ்வளவு தொகை நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது? அதற்கு சேவை வரி செலுத்தப்பட்டதா? என்பன போன்ற விவரங்களை 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் இமாசலபிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் மாநில பாரதீய ஜனதா கட்சிக்கும் நோட்டீசுகள் அனுப்பப்பட்டு இருந்தன.
இதற்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதுபற்றி அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி தனது வலைத்தள பக்கத்தில் எழுதி இருந்ததாவது:-