மூன்று வருடங்களுக்கு முன் நரேந்திர மோடி குஜராத்திலுள்ள மெஹ்சானா நகரில் "நான் அல்ல, நாம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பிரச்சாரம் செய்தார்.
அதே முழக்கத்தை முன் வைத்து தற்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டும் விதமாக இந்த விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. இந்த விளம்பரத்தில் சோனியாவோ, மன்மோகன் சிங்கோ இடம் பெறவில்லை. இத்தகைய விளம்பரத்தில் மோடி உபயோகித்த அதே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மோடியின் முழக்கத்தை காங்கிரஸ் கட்சி காப்பியடித்துவிட்டதாக செய்தி வெளியானதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, யாருடைய முழக்கத்தையும் தங்கள் கட்சி பயன்படுத்தாது என்றும், தங்கள் முழக்கமே வேறு எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.