தற்போது ஒன்றிணைந்துள்ள இக்கட்சிகளின் புதிய அணி, தற்போது நாட்டில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு ஒரு மாற்றாக அமையுமென தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த 11 கட்சிகளின் சார்பில் அந்தந்த கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், இக்கட்சிகளின் சார்பில் ஐந்து அம்ச பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
அப்போது பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் கரத், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜக வின் கொள்கைகளுக்கும், காங்கிரசின் கொள்கைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையெனவும், எனவே தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அணி இக்கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.