Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுதும் சுற்றி உபதேசம் செய்கிறார்.. ஆனால் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல் பேசுகிறார் - ராகுல் காந்தியை மோடி கேலி

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (16:11 IST)
காங்கிரஸ் இளவரசர், நாடு முழுவதும் சுற்றிச்சுற்றி போதனையும், உபதேசமும் செய்கிறார். அவர் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல, மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். அவர் முதலில், மத்திய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த அரசு, அவரது கட்சியினுடையதா? இல்லையா? என்று விளக்க வேண்டும். என்று மோடி பேசியுள்ளார்.
FILE

பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசும்போது இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:

மத்திய அரசின் ஊழல் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, விலைவாசி பற்றியோ கேள்வி கேட்டால், அவர் பதில் அளிப்பது இல்லை. அவர் குற்றம் சாட்டுவதோடு சரி, பதிலே அளிப்பது இல்லை.


காங்கிரஸ் இளவரசர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் செல்போனும், கம்ப்யூட்டரும் இலவசமாக அளித்தாக கூறுகிறார். ஆனால், அவற்றை ‘சார்ஜ்’ செய்ய மின்சாரம் கொடுத்தாரா? அவருக்கு இந்தியாவின் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்று கேட்க விரும்புகிறேன்.

தேசிய அளவில், பள்ளிகளில் 22 சதவீத கம்ப்யூட்டர்தான் உள்ளன. ஆனால், நீங்கள் எதற்கெடுத்தாலும் குற்றம் சாட்டும் குஜராத்தில் உள்ள பள்ளிகளில் 71 சதவீத கம்ப்யூட்டர்கள் உள்ளன.

மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், ஏதோ அவர்தான் அறிவுக்கே பிறப்பிடம் போல நினைத்துக்கொள்கிறார். ‘ஆகாஷ்’ டேப்லெட்டுகள் எங்கே போயின என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அதற்கான பணம் எங்கே போனது?

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments