ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கினார். கட்சி துவங்கிய சில மாதங்களிலேயே நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி பரவியது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. பலருடைய எதிர்பார்ப்பையும் மீறி சட்டமன்றத்தில் 28 இடங்களைப் பிடித்து, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.