நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்..
அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் ஆதரவு அளிப்பேன் எனவும், நாங்கள் மூவரும் சேர்ந்து நாட்டுக்காக உழைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, மதவாதத்திற்கு ஆதரவு தர முடியாது எனவும், ராகுல் காந்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'என்னால் தனிப்பட்ட நபரை பற்றி பேசமுடியாது, கட்சியை பற்றி கேளுங்கள் எனவும் பதிலளித்தார்.