Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சி ஏழைகளை கேலி செய்வதாக மோடி பேச்சு

Webdunia
சனி, 25 ஜனவரி 2014 (15:50 IST)
உத்தர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி, ஆளும் காங்கிரஸ் கட்சி ஏழைகளை கேலி செய்வதாகவும், ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
FILE

கோரக்பூரில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ஏழைகளை கேலி செய்து வருகிறது.

டீ விற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருப்பதை அக்கட்சி ஏற்க மறுக்கிறது. ஏழைகளின் வளர்ச்சியை காங்கிரஸ் விரும்பவில்லை, காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் வறுமை நிலை உயர்ந்து வருகிறது.
FILE

தேர்தலின்போது மட்டும் ஏழைகளை பற்றி காங்கிரஸ் கவலைப்படும். பின்னர் அது தொடர்பான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாது. இந்த நாடு ஏழ்மையான நாடு இல்லை. முறையான ஆட்சி அமையாததால் இந்த நிலையில் உள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தனது கனவான 'காங்கிரஸ்-ப்ரீ இந்தியா' என்பது நடைமுறையில் நிறைவேறுமென மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியன் பட ஸ்டைலில் லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக் கொடுத்த கணவன்! - ஹைதராபாத்தில் ஆச்சர்ய சம்பவம்!

தொழிலாளர்களை போராட விடு.. தமிழக அரசுக்கு இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!

சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம்..!

வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு.. கணக்கீட்டு புரத வடிவமைப்புக்கு பரிசு..!

அழுக்கேறிய மூளையை சுத்தப்படுத்த முடியாது! காலாவது சுத்தமாகட்டும்! - தன் போட்டோவை மிதித்தவர்களுக்கு உதயநிதி பதில்!

Show comments