Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை பேசினால் எதிரிகள் உருவாகிறர்கள்- மம்தா

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (17:38 IST)
FILE
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா திடலில் ஊழல் எதிர்ப்பாளர் அண்ணா ஹசாரேயுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரே திடீரென உடல் நிலை சரியில்லை என்று கழன்று கொண்டார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ராம்லீலா திடலில் கூடியிருந்த மக்களிடையே மத்திய அரசை கடுமையாக தாக்கி இன்று ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான் எனக்காக எதுவும் கேட்டு உங்கள் முன்னால் நிற்கவில்லை. ஐக்கிய முற்போக்கு ஆட்சியை விரட்ட வேண்டும். பா.ஜ.க.வின் ஆட்சி அமைவதையும் தடுக்க வேண்டும். கூட்டணி அரசின் மூலம் நாட்டை பலப்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

நான் எனக்காக மட்டும் அதிகாரம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் அனைவருக்குமான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறி வருகிறேன். காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றாக சேர்ந்து நாட்டை கூட விற்று விடுவார்கள். இந்த நாடு இந்தியர்கள் வாழ்வதற்கா? அல்லது விற்பனைக்கா? என்பது புரியவில்லை.

ஒருவர் உண்மையை பேசினால் அவருக்கு பல எதிரிகள் உருவாகி விடுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனினும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments